சர்க்கரை நோயை போக்கி அருளும் வெண்ணிகரும்பேஸ்வரர்

 

வெண்ணிகரும்பேஸ்வரர்

சர்க்கரை நோயை போக்கி அருளும் வெண்ணிகரும்பேஸ்வரர் 

ர்க்கரை நோயை போக்கும், கோயில்  திருவாரூரில் அருகில் உள்ள திருவெண்ணியூர்.(திருவெண்ணியூர் கோயில்வெண்ணி)

 தல வரலாறு:

1000, வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட மிகப்பழமையான புராதான கோயிலாகும். முற்காலத்தில் இத்தலம் முழுவதும் கரும்புக்காடுகளால் சூழப்பட்டிருந்ததுஒரு முறை, இரு முனிவர்கள் தல யாத்திரை மேற்கொண்டபோது  இத்தலத்திற்கு  வந்தனர்

அப்போது இந்த கரும்பு காட்டிற்குள் இறைவனின் திருமேனியை கண்டு தொழுதார்கள்அவர்களில் ஒருவர் இத்தலத்தின் தலவிருட்சம் கரும்பு என்றும்மற்றொருவர் வெண்ணி என்றழைக்கப்படும் நந்தியாவர்த்தம் என்றும் வாதிட்டனர்.

இறைவன், அசரீரியாக தோன்றி,"எனது பெயரில் கரும்பும்தலவிருட்சமாக வெண்ணியும் இருக்கட்டும்,' என்றருளினார்அன்று முதல் இறைவன் கரும்பேஸ்வரர் என அழைக்கப்பட்டார்.

இதுவே வடமொழியில் ரசபுரீஸ்வரர் ஆனதுதல விருட்சத்தின் பெயரால் இத்தலம் வெண்ணியூர் என்றழைக்கப்பட்டதுஇதுவே காலப்போக்கில் மருவி கோயில் வெண்ணி ஆனது.

சர்க்கரை வியாதியை போக்கக் கூடிய கோயிலாக உள்ளது, திருவாரூரில் அருகில் உள்ள திருவெண்ணியூர் உள்ள வெண்ணிகரும்பேஸ்வரர் கோயில்தற்போது கோவில்வெண்ணி என்று அழைக்கப்படுகின்றது. திருவாருரில் இருந்து 28 கிமி தூரம் தஞ்சாவூர் சாலையில் உள்ளது இந்த கோவில். அப்பர்சம்பந்தர் உள்ளிட்டோர் பாடல் பெற்ற திருத்தலம்.

கோவிலின் முகப்பு

லகில் மிக அதிகமானோர் பாதித்திருக்கும் நோய் சர்க்கரை நோய் எனப்படும் நீரழிவு நோய்இன்சுலின் எனும் சுரப்பியில் ஏற்படும் குறைபாடு காரணமாக இந்த நோய் ஏற்படுகிறதுஇந்த நோயை  கட்டுப்படுத்த முடியுமே தவிரமுற்றிலும் குணப்படுத்த முடியாது

மருத்துவர்களை தாண்டி உள்ளதுதான் கடவுள் மீது உள்ள நம்பிக்கைஅந்த வகையில் திருவெண்ணியூரில் உள்ள வெண்ணிக்கரும்பர் கரும்பேஸ்வரரை வழிபட்டால் சர்க்கரை வியாதியிலிருந்து விடுபடலாம் என நம்பப்படுகிறது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த கோயிலில் சர்க்கரை மற்றும் ரவையை சேர்த்து வெண்ணிகரும்பேஸ்வரருக்கு அர்ச்சனை செய்து பிரகாரத்தை வலம் வந்து பின்னர் பிரகாரத்தில் தூவினால்சர்க்கரையை மட்டும் எறும்புகள் திண்றுவிட்டால்அவர்களுக்கு உடனே சர்க்கரை நோய் குறைவதாக ஐதீகம்.

வேண்டுதல் நிறைவேறினால் இங்கு வந்து சர்க்கரைப் பொங்கலை நிவேதித்து, தன் நேர்த்திகடனை தீர்க்கின்றனர்.

தலபெருமை:

மிகவும் பழமையான இத்தலத்து இறைவனை நான்கு யுகங்களிலும் வழிபாடு செய்யப்பட்டுள்ளதாக தலவரலாறு கூறுகிறதுஇறைவனின் திருமேனி அதாவது பாணத்தில் கரும்புக்கட்டுகளாக கட்டப்பட்டிருப்பது போன்ற காட்சியுடன் அருள்பாலிக்கிறார்.

சங்க காலத்தில் இவ்வூரில் வெண்ணிக்குயத்தியார் என்ற பெரும்புலவர் அவதரித்தார்இவர் பாடிய புறநானுற்றுப்பாடல் கரிகாற் சோழனின் வெண்ணிப்போரைக்கூறுகிறது.

கரிகாற்சோழன் தன் 18, வது வயதில் இங்குள்ள பிடாரி அம்மனை வழிபட்டு சேரபாண்டிய மற்றும் குறுநில மன்னர்களை எதிர்த்து போர் செய்து வெற்றி பெற்றுள்ளான்கரிகாற்சோழன் பெற்ற இந்த வெற்றியே மாபெரும் வெற்றியாக கல்வெட்டு கூறுகிறது.

இந்த பிடாரி அம்மனை வழிபடுபவர்களுக்கு எதிரி பயம் இருக்காது என்பது ஐதீகம்.

தான் பெற்ற வெற்றியை கொண்டாடும் விதத்தில் கரிகாற்சோழனும்முசுகுந்த சக்கரவர்த்தியும் இக்கோயிலுக்கு திருப்பணி செய்துள்ளதாக தெரிகிறது.

தல சிறப்பு:

ங்குனி 2,3,4 ஆகிய தேதிகளில் சிவனின் திருமேனி மீது சூரிய ஒளி படர்ந்து சூரிய பூஜை நடக்கிறதுஇத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 165 வது தேவாரத்தலம் ஆகும்.

 பொது தகவல்:

கிழக்கு நோக்கிய கோயில்எதிர்புறம் சூரியதீர்த்தம்மூன்று நிலைராஜககோயிலின் உள்ளே நந்திபலிபீடம் உள்ளன.

பிரகாரத்தில் விநாயகர்முருகன்கஜலட்சுமிபைரவர்நவக்கிரக சன்னதிகள் உள்ளன.

கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர்தட்சிணாமூர்த்திலிங்கோத்பவர்துர்க்கைஆகியோர் உள்ளனர்கருவறை அகழி அமைப்புடையது.

திருவிழா:

வராத்திரி 9 நாட்களும் திருவிழா கொண்டாடப்படுகிறதுபங்குனி உத்திரம்சித்திரா பவுர்ணமிவைகாசி விசாகம்ஆனித்திருமஞ்சனம்திருக்கார்த்திகைதிருவாதிரைதைப்பூசம்மாசிமகம் ஆகிய திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது.

வெண்ணிகரும்பேஸ்வரர்

 மூலவர்: வெண்ணிகரும்பேஸ்வரர், (திரயம்பகேஸ்வரர், இரசபுரீஸ்வரர், வெண்ணிநாதர்)

தாயார்:  அழகிய நாயகி (சவுந்தர நாயகி)

தல விருட்சம்: நந்தியாவர்த்தம்

தீர்த்தம்:  சூரிய, சந்திர தீர்த்தங்கள்

ஆகமம்/பூஜை: காமிய ஆகமம்

புராண பெயர்: திருவெண்ணியூர், கோயில்வெண்ணி

ஊர்: கோயில்வெண்ணி

மாவட்டம்:  திருவாரூர்

மாநிலம்: தமிழ்நாடு

பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர்

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 8-12, மாலை 5-8 மணி வரை

அமைந்திருக்கும் இடம்:திருவாரூர், நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணி என்ற இடத்தில் அமைந்துள்ளது.

கருத்துகள்